ETV Bharat / bharat

முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை.. நீர்மட்டத்தை 140 அடியாக குறைக்க கேரளா திட்டம்!

author img

By

Published : Mar 24, 2022, 6:29 PM IST

126 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணையின் கட்டமைப்புப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை, கண்காணிப்புக் குழு மூலம் தீர்க்கலாம் என்று தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (மார்ச் 24) பரிந்துரைத்துள்ளது. முன்னதாக அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 140 ஆக குறைக்க கேரளா கேட்டுக்கொண்டது.

முல்லைப் பெரியாறு
முல்லைப் பெரியாறு

புதுடெல்லி : முல்லைப் பெரியாறு அணையின் கீழ்பகுதியில் புதிய அணை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று கேரளா பிரச்சினை எழுப்பியுள்ள நிலையில் மேற்கூறிய பரிந்துரையை உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரியாற்றில் 1895ஆம் ஆண்டு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சினைகளை எழுப்பிய மனுக்கள் மீதான வாதங்களைக் கேட்ட நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு, முழுமையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து, விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியது.

முல்லைப் பெரியாறு வழக்கு : மேலும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இன்னமும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. அரசியல் கட்சிகளிடையே இன்னும் தவறான தகவல்தொடர்பு உள்ளது. எல்லா இடங்களிலும் பாதுகாப்பு பிரச்சினை பற்றிய அச்சம் உள்ளது.

எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அந்த வேலையை இந்த மேற்பார்வைக் குழுவே ஏன் செய்யக்கூடாது என்று நீதிபதிகள் ஏஎஸ் ஓகா (A S Oka ) மற்றும் சிடி ரவிக்குமார் (C T Ravikumar) ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.

தமிழ்நாடு அரசு வாதம் : இந்த மனு மீதான விசாரணையின்போது, தமிழ்நாடு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நபாடே, கண்காணிப்புக் குழுவின் நோக்கம், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்வதாகவும், இவை முக்கியமான விஷயங்கள் என்பதால், இந்த விவகாரத்தில் அறிவுறுத்தல்களை எடுப்பதாகவும் கூறினார். அணையை தக்கவைப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்றார்.

நீர்மட்டத்தை குறைக்க கேரளா கோரிக்கை : மனுதாரர்களில் ஒருவருக்காக ஆஜரான வழக்கறிஞர், கண்காணிப்புக் குழுவின் செயல்பாடு குறித்து வாதிட்டபோது, “இந்த நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவை நீங்கள் கேள்வி கேட்க அனுமதிக்க முடியாது” என்றனர்.

கேரளா சார்பில் ஆஜரான வக்கீல், தற்போதுள்ள அணையின் கீழ்பகுதியில் புதிய அணை அமைக்கும் பணி தொடங்க வேண்டும் என்றும், முல்லைப் பெரியாறு அணையின் மேல்நிலை மட்டம் 140 அடியாக இருக்க வேண்டுமே தவிர, 142 அடியாக இருக்கக் கூடாது” என்றார்.

உச்ச நீதிமன்றம் பரிந்துரை : மேலும், “எந்தவொரு புத்துயிர் அளித்தாலும்” அணையை நிலைநிறுத்த முடியாது என்றும், பராமரிப்பு மற்றும் பலப்படுத்துதல் மூலம் அணைகளை எத்தனை ஆண்டுகள் சேவையில் வைத்திருக்க முடியும் என்பதற்கு வரம்பு உள்ளது என்றும் கேரள அரசு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது” என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “126 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணையின் கட்டமைப்புப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை, கண்காணிப்புக் குழு மூலம் தீர்க்கலாம் என்று இரு மாநில அரசுக்கும் பரிந்துரைத்தனர்.

இதையும் படிங்க : முல்லைப் பெரியாறு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு பிரமாண பத்திரம் தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.