ETV Bharat / bharat

வன்முறையின்போது எனது மகன் அந்த இடத்தில் இல்லை - அமைச்சர் விளக்கம்

author img

By

Published : Oct 4, 2021, 12:29 PM IST

உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் உழவர்கள் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின்போது தனது மகனோ அல்லது தானோ அந்த இடத்தில் இல்லை என ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார்.

அமைசச்ர் விளக்கம்
அமைசச்ர் விளக்கம்

டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி என்ற இடத்தில் அம்மாநில துணை முதலமைச்சர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடம் அருகே உழவர்கள் போராட்டம் நடைபெற்றது. அப்போது, துணை முதலமைச்சர் மயூரியாவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக உழவர்கள் அங்கு கூடியிருந்தனர்.

அப்போது ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா துணை முதலமைச்சரை வரவேற்க தனது காரில் சென்றார். அவரது காரையும் மறித்து காரின் முன் திரண்டு உழவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து, அவர்களை இடித்துத் தள்ளியபடி அங்கிருந்து காரை எடுத்துச் சென்றுள்ளார் ஆஷிஷ் மிஸ்ரா. இதில் உழவர்கள் சிலர் படுகாயம் அடைந்த நிலையில் நால்வர் உயிரிழந்தனர்.

அமைச்சர் விளக்கம்

இதனால் கோபமடைந்த உழவர்கள் இரண்டு கார்களுக்கும் தீவைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்நிலையில், லக்கிம்பூர் கெரி என்ற இடத்தில் நிகழ்ந்த வன்முறையில், நான்கு உழவர்கள் உள்பட எட்டு பேர் உயிரிழந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அஜய் மிஸ்ரா, இந்தச் சம்பவம் நடந்தபோது தனது மகனோ அல்லது தானோ அந்த இடத்தில் இல்லை என்று கூறியுள்ளார். காருக்கு அடியில் சிக்கி இரண்டு உழவர் இறந்துவிட்டதாக மிஸ்ரா தொலைபேசியில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

உ.பி. வன்முறையில் 8 பேர் மரணம்: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.