ETV Bharat / bharat

7 வயது சிறுமியைப்பாலியல் வன்புணர்வுசெய்து கொன்ற 19 வயது இளைஞர்!

author img

By

Published : Oct 11, 2022, 10:58 AM IST

ஹரியானாவில் 7 வயது சிறுமியை 19 வயது இளைஞர் பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சிமிகு சம்பவம் நடந்தேறியுள்ளது.

7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த 19 வயது வாலிபன்...!
7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த 19 வயது வாலிபன்...!

ஹரியானா: 7 வயதே ஆன ஓர் சிறுமியை 19 வயதான இளைஞர் ஒருவர் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொன்றுவிட்டு, அச்சிறுமியின் பாதி எரிந்த உடலை காட்டில் கடந்த ஞாயிறு(அக்.9) அன்று புதைத்துள்ளார்.

இதுகுறித்து அச்சிறுமியின் குடும்பத்தினர் கூறுகையில், கடந்த ஞாயிறு மதியத்திலிருந்து தங்களின் குழந்தையைக் காணவில்லை என்றும், இதையடுத்து காவல்துறையில் அளித்தப்புகாரின் பேரில் தேடிய காவல் துறையினர் பாதி இறந்த நிலையில் புதைக்கப்பட்ட அச்சிறுமியின் சடலத்தைக்கண்டெடுத்தனர்.

இதுகுறித்து கொலை செய்த அந்த இளைஞர் கூறுகையில், தான் அந்தச்சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்ததாகவும், அச்சிறுமியுடன் தினமும் தான் விளையாடி வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தான் அந்தச் சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாகவும், பின் இதனால் தனக்கு எந்த ஆபத்தும் வந்துவிடுமோ என்ற பயத்தில் சிறுமியைக்கொன்றுவிட்டதாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து அந்த இளைஞர் மீது போக்சோ மற்றும் கொலைவழக்குகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய பெண் மும்பையில் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.