ETV Bharat / bharat

பாதுகாப்பான நிலையில் மின்கம்பியில் சிக்கிய சாவியை எடுக்க முயன்ற நபர்; மின்சாரம் தாக்கி பலி

author img

By

Published : Nov 2, 2022, 10:23 PM IST

மின் கம்பியில் சிக்கிய கார் சாவியை எடுக்க முயன்ற மல்லப்பா(58) என்பவர், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

மின் கம்பியில் சிக்கிய சாவியை எடுக்க முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
மின் கம்பியில் சிக்கிய சாவியை எடுக்க முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ஹஸன் (கர்நாடகா): மின் கம்பியில் சிக்கிய கார் சாவியை எடுக்க முயன்ற மல்லப்பா(58) என்பவர், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராகப் பணிபுரியும் மல்லப்பா, தனது வீட்டின் பால்கனியில் உள்ள மின்கம்பியில், தனது கார் சாவி சிக்கி இருப்பதைக் கண்டுள்ளார்.

இந்நிலையில், அதை வீட்டைத் துடைக்கும் துடைப்பத்தை வைத்து எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அவரது உடலை உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். இந்தச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

பாதுகாப்பானநிலையில் மின்கம்பியில் சிக்கிய சாவியை எடுக்க முயன்ற நபர்;மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

முன்னதாக, அவர் செருப்பு அணிந்தும், கைகளில் துணியை வைத்துக்கொண்டும் அதை எடுக்கமுயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'குலா' மூலம் இஸ்லாமியப்பெண்கள் கணவரின் அனுமதியின்றி விவாகரத்து செய்யலாம் - கேரள உயர்நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.