திஸ்பூர்: அசாம் மாநிலம் சிராங் மாவட்டம் பசுகுவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவரது வீட்டிலிருந்து ஒரு யானைத் தந்தமும், 105 பயன்படுத்தப்படாத வெடிகுண்டுகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, இவர் மீது முதல் தகவல் அறிக்கையும், வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்து காவலர்கள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.