ETV Bharat / bharat

ஸ்ரீநகரில் கோழிக்கு பறவைக் காய்ச்சல்: தடுப்பு நடவடிக்கை தீவிரம்

author img

By

Published : Mar 20, 2021, 10:07 AM IST

காஷ்மீர்: ஸ்ரீநகரில் பண்ணையில் உள்ள கோழிக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதியானதையடுத்து, தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Avian influenza
கோழி

கடந்த சில மாதங்களாகப் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது ஸ்ரீநகரில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கிருந்த கோழியின் மாதிரியைச் சோதனை செய்ததில், பறவைக் காய்ச்சல் உறுதியானது. இதையடுத்து, பண்ணையைச் சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், காஷ்மீர் நெடுஞ்சாலையில் இரண்டு சோதனைச்சாவடிகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளன. அவ்வழியே இறக்குமதி செய்யப்பட்ட கோழி தொடர்பான பொருள்களைக் கொண்டுவரும் வாகனங்கள், தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: கையில் வில், அம்பு.. கழுத்தில் நூல்கண்டு மாலை.. வேட்புமனு தாக்கல் செய்த சிவசேனா வேட்பாளர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.