ETV Bharat / bharat

இந்தியாவில் மீண்டும் 30 ஆயிரமாக குறைந்த கரோனா பாதிப்பு

author img

By

Published : Aug 22, 2021, 12:47 PM IST

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 403 பேர் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

இந்தியாவில் கரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 30 ஆயிரத்து 948 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 24 ஆயிரத்து 234ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (ஆக.21) மட்டும் 38 ஆயிரத்து 487 பேர் குணமடைந்த நிலையில் மொத்தமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 16 ஆயிரத்து 36 ஆயிரத்து 469ஆக உள்ளது. தற்போது 3 லட்சத்து 53 ஆயிரத்து 398பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா தொற்றால் பாதித்தவர்களில் 403 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 34 ஆயிரத்து 398ஆக அதிகரித்துள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதுவரை நாட்டில் மொத்தம் 58 கோடியே 14 லட்சத்து 89 ஆயிரத்து 377 கரோனா டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.