ETV Bharat / bharat

கரோனா நிலவரம்: நாடு முழுவதும் புதிதாக 48,786 நபர்கள் பாதிப்பு

author img

By

Published : Jul 1, 2021, 1:05 PM IST

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்து 786 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்து 5 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

COVID-19 tracker
COVID-19 tracker

நாட்டின் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்து 786 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்து ஐந்து பேர் கரோனா பாதிப்புக்குக் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கோவிட் - 19 நிலவரம்

இந்தியாவில் இதுவரை, மூன்று கோடியே நான்கு லட்சத்து 11 ஆயிரத்து 634 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஐந்து லட்சத்து 23 ஆயிரத்து 257 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை மூன்று லட்சத்து 99 ஆயிரத்து 459 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை, தடுப்பூசி நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (ஜூன்.30) வரை நாடு முழுவதும் 41 கோடியே 20 லட்சத்து 21 ஆயிரத்து 494 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதில் நேற்று மட்டும் 19 லட்சத்து 21 ஆயிரத்து 450 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 27 லட்சத்து 60 ஆயிரத்து 345 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுவரை 33 கோடியே 57 லட்சத்து 16 ஆயிரத்து 19 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக பாதிப்புகள் கொண்ட மாநிலங்கள்

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கேரளாவில் 13 ஆயிரத்து 658 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க: பெலகாவி உதவும் கரங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.