ETV Bharat / bharat

75 நாள்களுக்கு பிறகு 60 ஆயிரமாக குறைந்த கரோனா

author img

By

Published : Jun 15, 2021, 10:14 AM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்து 726 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

இந்தியா
இந்தியா

இந்தியாவில் கரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 60 ஆயிரத்து 471 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே 95 லட்சத்து 70 ஆயிரத்து 881 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இரண்டாயிரத்து 726 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று லட்சத்து 77 ஆயிரத்து 31ஆக உயர்ந்துள்ளது.

தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை இரண்டு கோடியே 82 லட்சத்து 80 ஆயிரத்து 472 ஆக உள்ளது. தற்போதுவரை ஒன்பது லட்சத்து 13 ஆயிரத்து 378 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதுவரை, மொத்தமாக 25 கோடியே 90 லட்சத்து 44 ஆயிரத்து 72 பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாகத் தமிழ்நாட்டில் நேற்று (ஜூன் 14) ஒரேநாளில் 12 ஆயிரத்து 772 பேருக்குத் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 6 முதல் 12 வயது சிறார்களுக்கு கோவாக்சின் பரிசோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.