கர்நாடகா: பெங்களூரு மாவட்டம் ஹோஸ்கோட்டைச் சேர்ந்த ரமேஷ், அர்பிதா ஆகியோர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு மகனும், நான்கு வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இருவரும் ஹோசகோட் நகரில் வசித்து வந்தனர். கடந்த ஓராண்டாக இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் காவல் நிலையம் வரை தம்பதி சென்றுள்ளனர்.
இதனிடையே இருவரும் விலகிச் செல்ல முடிவு செய்துள்ளனர். பெற்றோருடன் அர்பிதா வசித்து வந்தார். கடந்த வாரம் தனது மனைவி அர்பிதாவிடம் ரமேஷ் சேர்ந்து வாழலாம் என கூறியுள்ளார். கடந்த சனிக்கிழமையன்று அவர் பில்கம்பே தொழிற்பேட்டைக்கு மனைவியை அழைத்துச் சென்று கழுத்து மற்றும் வயிற்றில் 15 முறை கத்தியால் தாக்கினார்.
பின்னர் அவரும் அதே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர் ஓசகோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று (அக்.16) உயிரிழந்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் காலி பாக்ஸ்களுடன் பால் முகவர்கள் போராட்டம்!