ETV Bharat / bharat

ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - நாராயணசாமி

author img

By

Published : Jan 10, 2023, 3:18 PM IST

Updated : Jan 10, 2023, 3:35 PM IST

ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதி நீக்கம் செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - நாராயணசாமி
ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - நாராயணசாமி

ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - நாராயணசாமி

புதுச்சேரி: தமிழ்நாடு அமைச்சரவையில் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு ஒப்புதல் கொடுக்கப்பட்ட உரையைப் படிக்காமல் மாற்றி படித்தது குறித்து புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, 'மக்கள் பிரதி நிதிகளின் சபையில் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட ஆளுநர் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி திருத்தி, தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி படித்துள்ளார்.

இது இந்திய அரசியலமைப்பிற்கு மிக எதிர்மறையான ஒரு செயல். குறிப்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் மதிக்கவில்லை. மேலும் அவர் தான்தோன்றித்தனமாக அந்த உரையை படித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சட்டமன்றத்தில் முதலமைச்சர் மிக தைரியமாக தீர்மானம் கொண்டு வந்திருக்கின்றார். அவருக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கின்றேன்.

ஆளுநர் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு ஒப்புதல் கொடுக்கப்பட்ட உரையைப் படிக்காமல் மாற்றி படித்ததற்கு தமிழ்நாடு அமைச்சரவை சட்டமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பது பாராட்டுக்குரியது. ஜனநாயக மாண்பைக் காக்கும் வகையில் அந்த தீர்மானம் இருக்கின்றது. புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தபோது 2021இல் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடிக்கு உரை அனுப்பிய போது அதற்கு காலதாமதம் செய்தார்.

அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை, ஆனால் குறிப்பிட்டபடி சட்டமன்றத்தில் பட்ஜெட்டை நிறைவேற்றினோம். அப்போது ஆளுநர் உரை இல்லாமல் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்பட்டது. அதேபோல தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆளுநர் உரை இல்லாமல் சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளார். ஆளுநர்கள் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு எதிர்மறையான அரசியலை செய்கின்றனர். ஆளுநருக்கு என்று சில அதிகாரங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் டாக்டர் அம்பேத்கரால் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை ஆளுநர் மீறி செயல்படுவது ஜனநாயகத்திற்கு புறம்பானது.

இதுவரை தமிழ்நாட்டில் ஆளுநர்கள் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு ஒப்புதல் அளித்த உரையைத் தான் படித்தார்களே தவிர இதுபோன்ற ஒரு தரம் கெட்ட வேலையை எந்த ஆளுநரும் செய்யவில்லை. இதை ஆளுநர் ஆர்.என்.ரவி செய்துள்ளார். ஆளுநராக இருக்க அவர் தகுதியற்றவர். உடனடியாக அவரை தகுதி நீக்கம் செய்வதற்கு தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்த பள்ளி மாணவர்கள் கைது

Last Updated : Jan 10, 2023, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.