ETV Bharat / bharat

குடிசையில் மோதிய கார்... 4 பெண்கள் உயிரிழப்பு!

author img

By

Published : Jan 30, 2022, 5:19 PM IST

தெலங்கானா கரீம்நகரில் குடிசை ஒன்றின் மீது கார் மோதியதில் நான்கு பெண்கள் உயிரிழந்தனர்.

கார் விபத்து
கார் விபத்து

தெலங்கானா: கரீம்நகர் நகரில் உள்ள கமான் பகுதியில், பெண்கள் சிலர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இன்று (ஜன 30) ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டில் அசைவம் சமைத்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் குடிசையின் மீது, காலை 7 மணியளவில், கார் ஒன்று மோதியது. அந்த விபத்தை ஏற்படுத்தியவர்கள் சம்பவ இடத்திலேயே காரை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச்சென்று, பெண்ணின் சடலத்தை மீட்டனர்.

மேலும் இவ்விபத்தில் காயமடைந்த 6 பெண்களை கரீம் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி மூன்று பெண்கள் உயிரிழந்தனர்.

இவ்விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்கள் ஃபரியத், ஜோதி, சுனிதா மற்றும் லலிதா எனத் தெரியவந்துள்ளது.

மேலும் விபத்தினை ஏற்படுத்திய கார், கச்சகாயலா ராஜேந்திர பிரசாத் என்ற நபரின் பெயரில் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.

இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்தி வரும் காவல் துறையினர், குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கத்தி முனையில் கொள்ளையடித்த எட்டு முகமூடி கொள்ளையர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.