ETV Bharat / bharat

உத்தரப் பிரதேச தேர்தல்.. கிளறிய அமித் ஷா.. பதிலடி கொடுத்த மாயாவதி!

author img

By

Published : Jan 1, 2022, 7:15 PM IST

அரசின் கருவூனா கையிருப்பதால் குளிர் காலத்திலும் பாஜகவினர் சூடான உணர்கின்றனர் என அமித் ஷாவை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

Mayawati
Mayawati

லக்னோ : பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் வருகிற மார்ச் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை கைப்பற்ற சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் முயற்சித்துவருகின்றன.

இந்நிலையில் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாயாவதியை மறைமுகமாக தாக்கி பேசினார். ஒரு கட்டத்தில் மாயாவதி தோல்வி பயத்தில் எந்தப் பொதுக்கூட்டமும் நடத்துவதில்லை, தோல்வி பயத்தில் அஞ்சி நடுக்கிறார்” எனக் கூறியிருந்தார்.

இதற்கிடையில் இன்று (ஜன.1)லக்னோவில் மாயாவதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “காங்கிரஸோ, பாஜகவோ மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ ஆட்சியில் இருக்கும்போது தேர்தலுக்கு சில மாதங்களுக்கு தேர்தல் பொதுக்கூட்டம், பேரணிக்கு பெரும் செலவு செய்வார்கள்.

அரசின் பணம் இருக்கும் கருவூலம் அவர்களை குளிர் காலத்திலும் சூடாக இருக்கும்படி செய்கிறது. ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும்போது அமைதியாக இருப்பார்கள். பேரணி, பொதுக்கூட்டத்துக்கு பெரும் செலவு செய்யமாட்டார்கள்.

மேலும் மாயாவதி யாருடைய கொள்கையையும் கடன் வாங்க அவசியமில்லை. நானும் மற்ற கட்சிகளை பார்த்து பொதுக்கூட்டம், பேரணி என்று ஒன்றன் பின் ஒன்றாக நடத்தினால் எனது மக்கள் தாங்க மாட்டார்கள் என்பதை நான் அறிவேன்.

தேர்தலில் எங்கள் பாணி என்பது வேறு. அரசியலில் பெரும் போட்டி இருந்தாலும் நாங்கள் இதனை மாற்ற விரும்பவில்லை. எங்களை கிண்டல் செய்து பத்திரிகைகள் தொடர்ந்து எழுதுகின்றன. எங்களை பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம்” என்றார்.

இதையும் படிங்க : டான்களுக்கு சீட் இல்லை - முக்தார் அன்சாரிக்கு 'நோ' சொன்ன மாயாவதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.