ETV Bharat / bharat

ரங்கசாமி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்.. நாராயண சாமி!

author img

By

Published : Jan 2, 2022, 7:50 AM IST

முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயண சாமி விமர்சித்துள்ளார்.

Narayana swamy
Narayana swamy

புதுச்சேரி : ரங்கசாமி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் உள்ள அவரது வீட்டில் ஜன.1இல் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி, எல்லா வளமும் பெற்று மாநில மக்கள் இன்புற்று வாழவேண்டும் என அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புத்தாண்டு கொண்டாட்டத்தில் புதுச்சேரி அரசும் சுகாதாரத் துறையும் நீதி மன்ற உத்தரவை பின்பற்றவில்லை, கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று புதுச்சேரியில் இரண்டு பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

இது அதிகரிக்கும் நிலையில் உள்ளது. தொற்று அதிகரித்தால் முதலமைச்சர் ரங்கசாமி இதற்கு பொறுப்பேற்க வேண்டும்” என்றார். மேலும் பாஜக, என்ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால் மாநில அந்தஸ்து பெறுவோம் என்று கூறினார்கள்.

ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, மக்களை ஏமாற்றி பாஜகவும், என்ஆர் காங்கிரசும் புதுச்சேரியில் ஆட்சியை பிடித்திருக்கின்றன. ரங்கசாமி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது, பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க : மாரியாத்தா சொல்றேன் ஊசி வேணாம் - செவிலியரை சாமி ஆடி துரத்திய மூதாட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.