ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (ஜூன். 5) பாதுகாப்பு அலுலவர்கள் சோதனை நடத்தியதில் ஜிம்பாபே நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ.78 கோடி மதிப்புள்ள 12 கிலோ ஹெராயின் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அதேபோல், இன்று (ஜூன்.6) நடைபெற்ற சோதனையில் சாம்பியா நாட்டைச் சேர்ந்த பெண் பைப் மூலம் போதைப் பொருள்கள் கடந்திவந்தது தெரிவந்துள்ளது.
இதையடுத்து, இந்த இரு பெண்களை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரிடமிருந்த போதைப் பொருள்களை வருவாய் புலனாய்வு இயக்குநரக அலுலவர்கள் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: 9.27 லட்சம் குழந்தைகளுக்கு மோசமான ஊட்டச்சத்து குறைபாடு' ஆர்டிஐ தகவல்!