ETV Bharat / bharat

ஜந்தர் மந்தரில் ஆட்சேப கோஷங்கள்- போலீசார் வழக்குப்பதிவு!

author img

By

Published : Aug 9, 2021, 7:36 PM IST

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆட்சேபனைக்குரிய கோஷங்கள் எழுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக டெல்லி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Jantar Mantar
Jantar Mantar

டெல்லி : டெல்லி ஜந்தர் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.8) உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சிலர் பேரணி நடத்தினார்கள்.

இந்தப் பேரணியின்போது சிலர் ஒரு மதத்தினருக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கோஷங்கள் எழுப்பியதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பான காணொலிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில் டெல்லி காவலர்கள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்களின் பேரணியின்போது சிலர் உள்ளே புகுந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் இந்தக் கோஷங்களை எழுப்பினார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லி காவலர்கள் இந்திய தண்டனைச் சட்டம் 153-ஏ (இன குழுக்கள் இடையே பகைமையை உருவாக்குதல்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் மாவட்ட பேரிடர் மீட்பு ஆணையமும் இந்தப் பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.