ETV Bharat / bharat

Bihar Hooch Tragedy: பீகாரைத் தொடரும் துயரம்! கள்ளச்சாராயத்தால் 40-யை எட்டிய பலி எண்ணிக்கை

author img

By

Published : Apr 18, 2023, 8:35 PM IST

பீகார் மாநிலம், சம்ரான் மாவட்டம், மொடிஹாரி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

பாட்னா (பீகார்): பீகார் மாநிலத்தில் மதுவிற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மது அடிமைக்கு ஆளானவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்கின்றனர். அவ்வாறு, அம்மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40-யை எட்டியுள்ளது. இதனைத்தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் கருணைத்தொகையாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 27 பேர் உயிரிழந்த நிலையில், ஈடிவி பாரத்தின் ஆய்வு அறிக்கையின் படி, கடந்த 15ஆம் தேதி முதல் 40 பேர் வரையில் உயிரிழந்திருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. துர்கௌலியா, ஹர்சித்தி, சுகௌலி, ரகுநாத்பூர் மற்றும் பஹர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த கள்ளச்சாராயம் குடித்ததால் பலரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் இது தொடர்பாக தங்களது கடமையை செய்யத் தவறியதாக பலரையும் அம்மாநில அரசு பணியிடைநீக்கம் செய்துள்ளது.

சதார் உள்ளிட்ட மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பலரும் உயிருக்குப் போராடி வரும் சூழ்நிலையில், அடுத்தடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை போலீசார் உடற்கூராய்வுக்குப் பின்னர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மேலும், இது தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, 174 பேரிடம் இவை தொடர்பாக தீவிர விசாரணையில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு பீகார் மாநில மதுவிலக்கு துறையின் ஏழு அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஏப்.15ஆம் தேதி முதல் மோதிஹாரி உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட பல பகுதிகளில் பெருமளவிலான கள்ளச் சாராயம் மற்றும் பிற ரசாயனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன.

50 லிட்டர் அளவிலான வெளிநாட்டு மதுபானங்களின் பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கள்ளச்சாராயம், 2,220 லிட்டர் அளவிலான கள்ளச்சாராயம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ரசாயனப் பொருட்கள், 1,729.53 லிட்டர் அளவிலான கள்ளச்சாராயம் உள்ளிட்டவைகளை கைப்பற்றியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த சம்பவம் குறித்த அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகாரில் இத்தகைய கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் கருணைத் தொகையாக வழங்குவதாக நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்.5ஆம் தேதி சட்ட விரோதமாக மது தயாரித்து விற்பனை செய்வதற்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பீகாரில் தொடரும் சோகம்: கள்ளச்சாராயம் குடிந்த மாமன், மருமகன் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.