ETV Bharat / bharat

இந்தியாவில் 85 லட்சத்து 53 ஆயிரம்‌ பேர் கரோனாவால் பாதிப்பு!

author img

By

Published : Nov 9, 2020, 8:20 PM IST

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 லட்சத்து 53 ஆயிரத்து 657 ஆக உயர்ந்துள்ளது

covu
covi

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 40 ஆயிரத்தை தாண்டுகிறது. வைரசை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிராக களமிறங்கியுள்ளன.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 903 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல், கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி 490 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 லட்சத்து 53 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 79 லட்சத்து 17 ஆயிரத்து 372 ஆக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்

அதிகப்பட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 19 ஆயிரத்தை கடந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் உள்ளன. தலைநகர் டெல்லியில் இன்று ஒரே நாளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு நாளில் டெல்லியில் பதிவான அதிக பாதிப்புகள் ஆகும்.

உலகளவில் கரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா 99 லட்சத்து 61 ஆயிரம் பாதிப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக 85 லட்சம் கரோனா பாதிப்புகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.