ETV Bharat / bharat

கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் ஒரேநாளில் 20,549 பேர் பாதிப்பு

author img

By

Published : Dec 30, 2020, 1:00 PM IST

கடந்த 24 மணிநேரத்தில் 20 ஆயிரத்து 549 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 286 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

COVID-19
COVID-19

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கோவிட்-19 தாக்கம் குறைந்துவருகிறது. கேரளா, கோவா மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் கோவிட்-19 பாதிப்பு பாசிட்டிவிட்டி அளவு 5 விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 20 ஆயிரத்து 549 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 286 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலவரம்

இந்தியாவில், இதுவரை மொத்தம் ஒரு கோடியே இரண்டு லட்சத்து 44 ஆயிரத்து 852 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 272 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 439 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (டிச. 30) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 11 லட்சத்து 20 ஆயிரத்து 281 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை மொத்தமாக சுமார் 17 கோடியே ஒன்பது லட்சத்து 22 ஆயிரத்து 30 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் உருமாறிய கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.