ETV Bharat / bharat

கோவிட்-19 : இந்தியாவில் வெகுவாக குறைந்த தினசரி பாதிப்பு

author img

By

Published : Oct 19, 2021, 3:59 PM IST

நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி திட்டம் முனைப்புடன் நடைபெற்றுவரும் நிலையில், தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

Covid 19
Covid 19

நாட்டில் கடந்த ஒருநாளில் 13 ஆயிரத்து 058 பேருக்குப் புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு மூன்று கோடியே 40 லட்சத்து 94 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 164 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 52 ஆயிரத்து 454 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 118 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் 83 லட்சத்து 23 ஆயிரத்து 647 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 98 கோடியே 86 லட்சத்து 87 ஆயிரத்து 652 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

70 கோடியே எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் முதல் டோஸ் தடுப்பூசியும், 28 கோடியே 78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

இந்தியா நூறு கோடி தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி நகர்வதாக சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிக்கும் உத்தரகாண்ட் - 23 பேர் மரணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.