ETV Bharat / bharat

நேற்று ஒரேநாளில் 3 லட்சம் பேருக்கு கரோனா

author img

By

Published : May 11, 2021, 2:44 PM IST

COVID-19
கரோனா பாதிப்பு

நேற்று (மே.10) ஒரே நாளில் மூன்று லட்சத்து 29 ஆயிரத்து 942 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 29 ஆயிரத்து 942 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 29 லட்சத்து 92 ஆயிரத்து 517ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

நேற்று (மே.10) கரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்றாயிரத்து 876 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்து 49 ஆயிரத்து 992ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 90 லட்சத்து 27 ஆயிரத்து 304ஆக உள்ளது.

தற்போது 37 லட்சத்து 15 ஆயிரத்து 221 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தமாக 17 கோடியே 27 லட்சத்து 10 ஆயிரத்து 66 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.