ETV Bharat / bharat

Covid 19: நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2,11,298 பேருக்குத் தொற்று

author img

By

Published : May 27, 2021, 3:49 PM IST

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்குக் கரோனா தொற்று(Corona Virus) இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 3,847 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

COVID-19
COVID-19

நாட்டின் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 11 ஆயிரத்து 298 நபர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 847 பேர் கரோனா பாதிப்புக்குக் காரணமாக உயிரிழந்தனர்.

இந்தியாவில் கோவிட் - 19 நிலவரம்:

இந்தியாவில் இதுவரை, இரண்டு கோடியே 73 லட்சத்து 69 ஆயிரத்து 093 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 24 லட்சத்து 19 ஆயிரத்து 907 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை மூன்று லட்சத்து 15 ஆயிரத்து 235 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

இரண்டாம் அலையின் தீவிரம் இந்தியாவில் குறைந்து வருகிறது
இரண்டாம் அலையின் தீவிரம் இந்தியாவில் குறைந்து வருகிறது

பரிசோதனை, தடுப்பூசி நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (மே 26) வரை நாடு முழுவதும் 33 கோடியே 69 லட்சத்து 69 ஆயிரத்து 353 நபர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 21 லட்சத்து 57 ஆயிரத்து 857 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 18 லட்சத்து 85 ஆயிரத்து 805 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 20 கோடியே 26 லட்சத்து 95 ஆயிரத்து 874 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக பாதிப்புகள் ஏற்படும் மாநிலங்கள்

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவினால் தமிழ்நாடு 33 ஆயிரத்து 764 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க: ’தில் இருந்தா அரெஸ்ட் பண்ணுங்க’ - சவால் விடும் பாபா ராம்தேவ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.