ETV Bharat / bharat

கோவிட்-19 நிலவரம்- ஒரே நாளில் 15,698 பாதிப்பு, உருமாறிய கரோனா பாதிப்பு 100ஐ தாண்டியது

author img

By

Published : Jan 13, 2021, 3:22 PM IST

கடந்த 24 மணிநேரத்தில் 15 ஆயிரத்து 968 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

COVID-19
COVID-19

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 15 ஆயிரத்து 968 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 202 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கோவிட் - 19 நிலவரம்

இந்தியாவில், இதுவரை ஒரு கோடியே நான்கு லட்சத்து 95 ஆயிரத்து 147 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு லட்சத்து 14 ஆயிரத்து 507 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 529 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், பிரிட்டன் நாட்டிலிருந்து பரவிய உருமாறிய கரோனா பாதிப்பு எண்ணிக்கை நூறை தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி உருமாறிய கரோனா பாதிப்பு எண்ணிக்கை 102ஆக அதிகரித்துள்ளது.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (ஜன. 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8 லட்சத்து 36 ஆயிரத்து 227 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதுவரை மொத்தம் 18 கோடியே 34 லட்சத்து 89 ஆயிரத்து 114 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'பயங்கரவாதிகள் ஊடுருவ ரகசிய சுரங்கம்' - காஷ்மீரில் கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.