ETV Bharat / bharat

ஒரே நாளில் 12 ஆயிரத்து 881 பேருக்கு கரோனா பாதிப்பு!

author img

By

Published : Feb 18, 2021, 5:56 PM IST

நேற்று (பிப்ரவரி 17) மட்டும் 12 ஆயிரத்து 881 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே ஒன்பது லட்சத்து 50 ஆயிரத்து 201 ஆக அதிகரித்துள்ளது.

COVID-19
கரோனா

நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 881 பேர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 101 ஆக உள்ளது.

இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே ஒன்பது லட்சத்து 50 ஆயிரத்து 201 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 14 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே ஆறு லட்சத்து 56 ஆயிரத்து 845 ஆக உள்ளது.

மொத்தமாக 20 கோடியே 87 லட்சம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மட்டும் சுமார் ஏழு லட்சத்து 26 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஆளுநரின் அதிகாரம் என்ன என்பது எனக்குத் தெரியும் - தமிழிசை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.