ETV Bharat / bharat

கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் 98.26 லட்சம் பேர் பாதிப்பு

author img

By

Published : Dec 12, 2020, 4:41 PM IST

24 மணி நேரத்தில் 30,006 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 442 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

COVID-19
COVID-19

இந்தியாவில் தற்போது கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துவந்தாலும், சில மாநிலங்களில் மட்டும் கரோனா பெருந்தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலத்தில் பெருந்தொற்று பாதிப்பு திடீர் உயர்வைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 30,006 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 442 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்:

இந்தியாவில் இதுவரை மொத்தம் 98 லட்சத்து 26 ஆயிரத்து 775 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்று லட்சத்து 59 ஆயிரத்து 819 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 93 லட்சத்து 24 ஆயிரத்து 328 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 628 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 48 ஆயிரத்து 59 பேர் உயிரிழந்தனர். அடுத்தப்படியாக, கர்நாடகாவில் 11 ஆயிரத்து 928 பேர், தமிழ்நாட்டில் 11 ஆயிரத்து 870 பேர், டெல்லியில் ஒன்பதாயிரத்து 934 பேர் உயிரிழந்தனர்.

பரிசோதனை நிலவரம்:

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (டிச. 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 65 ஆயிரத்து 176 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை மொத்தமாக சுமார் 15 கோடியே 26 லட்சத்து 97 ஆயிரத்து 399 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'விவசாயிகள் நலனை பாதுகாப்பதே மத்திய அரசின் நோக்கம்' - நரேந்திர சிங் தோமர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.