ETV Bharat / bharat

படகில் கள்ளச்சாராயம்: பறிமுதல் செய்த போலீஸ்

author img

By

Published : Jul 9, 2021, 12:53 PM IST

புதுச்சேரி: ஏனாம் பகுதியில் படகு மூலம் கடத்தப்படவிருந்த கள்ளசாராயத்தை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

liquor
liquor

புதுச்சேரி, ஏனாம் பிராந்தியத்திற்கு உள்பட்ட சில தீவுகளில் சமூக விரோதிகள் சிலர் கள்ளச்சாராயம் தாயரித்து வருகின்றனர். இதுகுறித்து அவ்வப்போது காவல் துறையினருக்கும் கலால் துறையினருக்கும் ரகசியத் தகவல் கிடைத்து வரும் நிலையில், அங்கு சென்ற சாராயத்தை கைப்பற்றி அழித்து வருவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

அந்த வகையில், திரிலாடிட்பா பகுதியில் படகுகள் மூலம் கள்ளச்சாராயம் கடத்தப்படவிருப்பதாக காவல் துறையினருக்கு முன்னதாக தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், அங்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டதில், படகு ஒன்றில் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, படகையும் அதில் இருந்த 400 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் காவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளச்சாராயம் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 50 லிட்டர் எரிசாராயம், சாராயம் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் உள்ளிட்டவைகளையும் காவல் துறையினர் கைப்பற்றினர்.

தொடர்ந்து, ஏனாம் மண்டல நிர்வாகி அமன் சர்மா உத்தரவின் பேரில், கலால் துறை ஆய்வாளர் சத்தியநாராயணா தலைமையிலான காவல் துறையினர் கடத்திலில் ஈடுபட்டவர்களை விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தர்மபுரியில் 600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.