ETV Bharat / bharat

கேரளாவில் 3 இலங்கை படகுகள் பறிமுதல்

author img

By

Published : Mar 7, 2021, 5:42 PM IST

கேரளா: மூன்று இலங்கை படகுகளை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்தது.

கேரளாவில் 3 இலங்கை படகுகள் பறிமுதல்
கேரளாவில் 3 இலங்கை படகுகள் பறிமுதல்

சர்வதேச கேரள எல்லைக்குள் வந்ததாக மூன்று இலங்கை படகுகளை இந்திய கடலோரக் காவல்படையினர் கைப்பற்றினர். அதில் வந்தவர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பல் எனக் கூறப்படுகிறது.

அந்தப் படகுகளில் மொத்தம் 19 பேர் இருந்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் விழிஞ்சம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

இன்று (மார்ச்7) சங்குமுகம் கடற்கரையில் பாஜக பொதுக் கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றிக் கொண்டிருந்தபோது, இந்த படகுகள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஷ்யா, ஈரானுடன் கடற்படை பயிற்சியில் ஈடுபடவில்லை - இந்தியா உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.