ETV Bharat / bharat

குவாட் உச்சி மாநாட்டில் பைடன், மோடி சந்திப்பு

author img

By

Published : Apr 28, 2022, 12:17 PM IST

டோக்கியோவில் நடக்கும் குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியை சந்தித்து பேசுவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

biden-to-meet-pm-modi-at-quad-summit-in-tokyo-next-month-white-house
biden-to-meet-pm-modi-at-quad-summit-in-tokyo-next-month-white-house

வாஷிங்டன்: இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணம் மே 20 முதல் 24 வரை திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே டோக்கியோவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அப்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப்பேசுவார். அதேபோல,தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல், ஜப்பான் பிரதமர் கிஷிடா ஃபுமியோ இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்த பயணம் இந்தோ- பசிபிக் பிராந்தியத்திற்கான உறுதியான நிலைப்பாட்டை மேம்படுத்தும் வகையில் அமையும். அதேபோல பைடன் ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியாவின் குவாட் குழுவின் தலைவர்களிடம் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்க துணை அதிபருக்கு கமலா ஹாரிசுக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.