ETV Bharat / bharat

மல்லிகார்ஜுன் கார்கேவிற்கு மிரட்டல்!

author img

By

Published : Jun 10, 2020, 11:32 PM IST

Updated : Jun 11, 2020, 3:34 AM IST

பெங்களூரு: மாநிலங்களவைத் தேர்தலிலிருந்து விலகக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவையும் அவர் மகன் ப்ரியாங்கையும் செல்போனில் மிரட்டல் வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

கடந்த ஞாயிற்றுக்கிழைமை அன்று "இரவு நானும் என் மகனும் தூங்கி கொண்டிருக்கும்போது, 1.30 - 1.40 மணியளவில் செல்போனில் அழைப்பு வந்தது, நான் கூட மாநிலங்களவை தேர்தல் குறித்து அழைப்பு வந்ததோ என்று நினைத்தேன்.

ஆனால் அழைப்பை எடுத்த என் மகன் ப்ரியாங்கை எதிர் தரப்பில் இருந்து பேசிய நபர் ஒருவர், இந்தத் தேர்தலிலிருந்து என்னை விலகுமாறு இந்தி, ஆங்கிலத்தில் தரக்குறைவாக பேசினார்” என்றார்.

பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தில் ப்ரியாங்க் புகார் அளித்தார். ஆனால் கர்நாடக டிஜிபி அலுவலகமும் காவல்துறை சைபர் பிரிவும் இதுவரை அதுதொடர்பாக புகார் ஏதும் வரவில்லை எனத் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: பாஜகவுக்கு முட்டுக்கட்டை போடும் காங்கிரஸ்: கிளைமாக்ஸில் வெற்றி யாருக்கு?

Last Updated : Jun 11, 2020, 3:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.