ETV Bharat / bharat

பயங்கரவாதிகள் ஊடுருவலா? பலப்படுத்தப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

author img

By

Published : Aug 24, 2019, 6:08 AM IST

புதுச்சேரி: தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உள்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, புதுச்சேரியிலும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பயங்கரவாதிகள் ஊடுருவலா

தமிழ்நாட்டினுள் ஆறு பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும், தொடர்வண்டி நிலையம், பேருந்து நிலையம், மற்றும் மக்கள் கூடும் இடங்களில் காவலர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர்.

பயங்கரவாதிகள் ஊடுருவலா? பலப்படுத்தப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

அதிகப்படியான காவல்துறையினர் இரவு பகலாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சுப்பையா சாலையில் அமைந்துள்ள தொடர்வண்டி நிலையத்தில், திருப்பதி, சென்னை, விழுப்புரம், புதுச்சேரி வழியாக வந்தடைந்த தொடர்வண்டியையும், அதில் வந்த பயணிகளையும் காவல் கண்காணிப்பாளர் மாறன் தலைமையிலான ஆய்வாளர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் மோப்ப நாயை கொண்டு சோதனையிட்டனர்.

Intro:தமிழகப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக உள்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து புதுச்சேரியிலும் பல்வேறு இடங்களில் காவல் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.Body:புதுச்சேரி 23-08-19
தமிழகப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக உள்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து புதுச்சேரியிலும் பல்வேறு இடங்களில் காவல் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



தமிழகத்திற்குள் 6 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பினை பலப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி சுற்றுலா பயணிகள் கூடும் இடங்களான பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். போலீசார் இரயில் நிலையம், பேருந்து நிலையம், மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சுப்பையா சாலையில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் திருப்பதி சென்னை விழுப்புரம் புதுச்சேரி வந்தடைந்த பயணிகள் ரயிலை காவல் கண்காணிப்பாளர் மாறன் தலைமையிலான ஆய்வாளர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயை கொண்டு ரயிலில் வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக அவர்கள் கொண்டுவந்த பைகளை சோதனையிட்ட போலீசார் அவர்கள் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை வாங்கி பரிசோதித்தனர்.Conclusion:தமிழகப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக உள்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து புதுச்சேரியிலும் பல்வேறு இடங்களில் காவல் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.