ETV Bharat / bharat

மாவோயிஸ்டுகள் வைத்த ஒன்பது கண்ணி வெடிகள் மீட்பு!

author img

By

Published : Dec 8, 2020, 8:47 PM IST

ராஞ்சி: ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த ஒன்பது கண்ணி வெடிகளை காவல் துறை, சிஆர்பிஎஃப் அலுவலர்கள் மீட்டுள்ளனர்.

மாவோயிஸ்டுகள் வைத்த ஒன்பது கண்ணிவெடிகள் மீட்பு
மாவோயிஸ்டுகள் வைத்த ஒன்பது கண்ணிவெடிகள் மீட்பு

ஜார்க்கண்ட்டின் லதேஹர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரை குறி வைத்து மாவோயிஸ்டுகள், சாலையில் கண்ணி வெடிகள் புதைத்து வைத்திருப்பதாக காவல் துறை, சிஆர்பிஎஃப் அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற அலுவலர்கள் மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த ஒன்பது கண்ணி வெடிகளை கைப்பற்றினர். இதையடுத்து, பாலமு மற்றும் லதேஹர் மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கையில் காவல் துறையினரும், சிஆர்பிஎஃப் அலுவலர்களும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பீஜப்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.