ETV Bharat / bharat

புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் தொடக்கம்

author img

By

Published : Jan 3, 2021, 8:54 PM IST

புதுச்சேரி: கரோன தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பள்ளிகள் நாளை (ஜன.04) முதல் மீண்டும் தொடங்குகிறது.

புதுச்சேரியில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் தொடக்கம்
புதுச்சேரியில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் தொடக்கம்

புதுச்சேரியில் கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் 9,10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு கரோன ஊரடங்கிற்கு பின் கடந்த அக்டோபர் மாதம் அரசு, தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில், பெற்றோர்களின் விருப்ப கடிதம் இருந்தால் மட்டுமே பள்ளிக்கு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

புதுச்சேரியில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் தொடக்கம்
புதுச்சேரியில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் தொடக்கம்
இந்நிலையில் நாளை முதல் அனைத்து வகுப்புகளும் இயங்கும் என கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி நாளை 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பள்ளிகள் செயல்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஜனவரி 18ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் வழக்கமான நேரத்தில் முழுமையாக செயல்பட தொடங்கும் என தெரிவித்துள்ளனர். அதாவது பள்ளிகள் காலை முதல் மாலைவரை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பெரியார், அண்ணா, திராவிட இயக்கம் குறித்து குரூப் 1 தேர்வில் இடம்பெற்ற கேள்விகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.