ETV Bharat / bharat

ஹைட்ரோகார்பன் குறித்து கிரண் பேடி பதிலளிக்க வேண்டும் - காங். வலியுறுத்தல்

author img

By

Published : Jan 22, 2020, 7:06 PM IST

புதுச்சேரி: சுற்றுச்சூழலை பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் வலியுறுத்தியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத்
அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத்

அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத், காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளிடம் அனுமதி பெறாமல் வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய்தத்

இந்தத் திட்டத்தால் நிலத்தடி நீர் அழிந்து, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் இரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இதை எதிர்க்கின்றார்கள். புதுச்சேரி முதலமைச்சரும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என உறுதியளித்தார்.

கிரண் பேடி குறித்து பேசிய சஞ்சய்தத்

ஆனால், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துவதாகத் தம்பட்டம் அடிக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, இந்த விவகாரத்தில் ஏன் மௌனம் சாதிக்கின்றார். ஹைட்ரோகார்பன் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை உடனடியாக தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் பாஜகவின் கைப்பாவையாகச் செயல்படுவது உறுதியாகிவிடும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தன்னிச்சையாக செயல்படும் கிரண்பேடி - முதலமைச்சர் குற்றச்சாட்டு

Intro:புதுச்சேரி 22-01-2020
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருவதாக கூறும் ஆளுநர் கிரண்பேடி சுற்றுச்சூழலை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து ஆளுநர் கிரண்பேடி தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என சஞ்சய்தத் வலியுறுத்தல்.
--Body:புதுச்சேரி 22-01-2020
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருவதாக கூறும் ஆளுநர் கிரண்பேடி சுற்றுச்சூழலை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து ஆளுநர் கிரண்பேடி தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என சஞ்சய்தத் வலியுறுத்தல்.
--------------------------------------------------------------

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் மேலிட பொருப்பாளர் சஞ்சய் தத் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளிடம் அனுமதி பெறாமல் வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பம் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்த திட்டத்தால் நிலத்தடி நீர் அழிந்து போய் முற்றிலுமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் இரு மாநிலத்தை சேர்ந்தவர்களும் இதை எதிர்க்கின்றார்கள். புதுச்சேரி முதல்வரும் இந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என உறுதியளித்தார். ஆனால் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தான் அதிக கவனம் செலுத்துவதாகவும், தம்பட்டம் அடிக்கும் ஆளுநர் கிரண்பேடி இந்த விவகாரத்தில் ஏன் மவுனம் சாதிக்கின்றார் என்று கேள்வியெழுப்பிய அவர் ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை உடனடியாக தெரிவிக்க வேண்டும் இல்லையெனில் பாஜக வின் கைப்பாவையாக செயல்படுவது உறுதியாகி விடும் என தெரிவித்தார்.



இதன்பின்பு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் முதலமைச்சர் மற்றும் ஆளும் அரசு மீது புகார் கூறியதால் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தனவேலு எம்.எல்.ஏ வுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உரிய பதில் கிடைத்தவுடன் மேற்கண்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

பேட்டி: சஞ்சய்தத், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்Conclusion:புதுச்சேரி 22-01-2020
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருவதாக கூறும் ஆளுநர் கிரண்பேடி சுற்றுச்சூழலை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து ஆளுநர் கிரண்பேடி தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என சஞ்சய்தத் வலியுறுத்தல்.
--
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.