தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 118ஆவது பிறந்தநாள் புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. வைசியாள் வீதியில் காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமையில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமசிவாயம், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் ஊர்வலமாகச் சென்று காமராஜர் சதுக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, இனிப்புகளை வழங்கி காமராஜரின் பிறந்தநாளைக் கொண்டாடினர்.