ETV Bharat / bharat

பல்கர் கும்பல் வன்முறை: உத்தவ் தாக்கரே கருத்து!

author img

By

Published : Apr 20, 2020, 10:38 AM IST

மும்பை: பல்கர் மாவட்டத்தில் 3 பேர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.

CM Uddhav Thackeray
CM Uddhav Thackeray

மகாராஷ்டிராவின் கடலோர மாவட்டமான பல்கரில் ஏப்ரல் 16ஆம் தேதி மூன்று நபர்களை அப்பகுதி மக்கள் அடித்து கொலை செய்தனர். கண்டிவிலி பகுதியில் இருந்து சூரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த இரு சாதுக்களையும், ஒரு கார் டிரைவரையும் திருடர்கள் என நினைத்து தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 70க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தக் கொடூரக் கொலைகளில் தொடர்புடைய ஒருவரையும் மன்னிக்க முடியாது. அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

முன்பு மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், இந்த சம்பவம் தொடர்பாக உச்சகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர்கள் கல்பவிருக்‌ஷகிரி (70), சுஷில்கிரி (35) மற்றும் கார் ஓட்டுநர் நிலேஷ் தெல்கேட் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏப்ரல் 16ஆம் தேதி இரவு இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றபோது அவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.