ETV Bharat / bharat

'புதுச்சேரியை காங்கிரஸ் அரசு சீரழித்து வருகிறது..!' -ரங்கசாமி குற்றச்சாட்டு

author img

By

Published : Apr 9, 2019, 3:11 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியை சீரழித்து வரும் அரசாக காங்கிரஸ் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ரங்கசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரங்கசாமி பரப்புரை

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் கே.நாராயணசாமி ஆதரித்து அக்கட்சித் தலைவர் ரங்கசாமி இன்று வில்லியனூர், கணுவாப்பேட்டை பகுதிகளில் வேன் மூலம் பரப்புரை மேற்கொண்டார். ஜக்கு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், "புதுச்சேரியை சீரழித்துவரும் அரசாக காங்கிரஸ் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனது ஆட்சியின்போது பொலிவுறு நகரம் திட்டத்திற்கான கோப்புகள் அனுப்பப்பட்டு, புதுச்சேரிக்கு அத்திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி தாங்கள்தான் கொண்டு வந்ததாக பெருமை அடித்துக் கொள்கின்றனர். அரசு மதுபானக் கடைகளை தனியாருக்கு குத்தகை விடுவதில் காங்கிரஸ் சிந்தித்து வருகிறது. புதுச்சேரியில் லாட்டரி சீட்டு மற்றும் சூதாட்ட கிளப் தொடங்குவது பற்றியும் இந்த அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை" என்று குற்றம்சாட்டினார்.

ரங்கசாமி தேர்தல் பரப்புரை
Intro:புதுச்சேரியை சீரழித்து வரும் அரசாக காங்கிரஸ் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று என் ஆர் காங்கிரஸ் கட்சி நிறுவனர் ரங்கசாமி குற்றம் சாட்டினர்


Body:புதுச்சேரி 9

புதுச்சேரி அதிமுக கூட்டணி கட்சியான என் ஆர் காங்கிரஸ் பாராளுமன்ற வேட்பாளர் கே நாராயணசாமி ஆதரித்து அக்கட்சித் தலைவர் ரங்கசாமி இன்று வில்லியனூர் பகுதியில் உள்ள கணுவாப்பேட்டை பகுதியில் வேன் மூலம் பிரச்சாரம் செய்து ஜக்கு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் அப்போது பேசிய அவர் புதுச்சேரியை சீரழித்து வரும் அரசாக காங்கிரஸ் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று என் ஆர் காங்கிரஸ் கட்சி நிறுவனர் ரங்கசாமி குற்றம் சாட்டினர் மேலும் அவர் பேசுகையில் புதுச்சேரிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தனது ஆட்சியின் போது கோப்புகளை அனுப்பப்பட்டு கொண்டுவரப்பட்டது என்றும் இதனை காங்கிரஸ் கட்சி தாங்கள் கொண்டு வந்ததாக பெருமை அடித்துக் கொள்கின்றனர் என சாடினார் அரசு மதுபான கடைகளை தனியாருக்கு குத்தகை விடுவதில் காங்கிரஸ் சிந்தித்து வருகிறது மேலும் புதுச்சேரியில் லாட்டரி சீட்டு மற்றும் சூதாட்ட கிளப் தொடங்குவது பற்றியும் இந்த அரசு திட்டமிட்டு உள்ளது வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் அப்போது குற்றம் சாட்டினார்


Conclusion:புதுச்சேரியை சீரழித்து வரும் அரசாக காங்கிரஸ் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று என் ஆர் காங்கிரஸ் கட்சி நிறுவனர் ரங்கசாமி குற்றம் சாட்டினர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.