ETV Bharat / bharat

வெஸ்டர்ன் உடை மாரி வேட்டியில் பட்டைய கிளப்பிய கலெக்டர்!

author img

By

Published : Jan 7, 2020, 10:29 AM IST

புதுச்சேரி: உலக வேட்டி தினத்தை முன்னிட்டு, எப்போதும் வெஸ்டன் உடையுடன் இருக்கும் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா நேற்று வேட்டி உடையுடன் வலம்வந்தார்.

வேஷ்டியுடன் மாவட்ட ஆட்சியர்
வேஷ்டியுடன் மாவட்ட ஆட்சியர்

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி தினம் ஆண்டுதோறும் ஜனவரி 6ஆம் தேதி கொண்டாடப்பட்டுவருகிறது. வேட்டி தினத்தை சிறப்பிக்கும்விதமாக இளைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் நேற்று வேட்டி அணிந்து தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றினர்.

வேஷ்டி அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர்
வேட்டி அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர்

இந்நிலையில் எப்போதும் வெஸ்டர்ன் கலாசாரமான பேன்ட், சட்டை அணிந்திருக்கும், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா, உலக வேட்டி தினத்தை முன்னிட்டு நேற்று தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் தனது அலுவலகப் பணிகளையும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். இச்சம்பவம் தமிழர் கலாசாரத்தின் மீது பற்றுள்ள பலரது பாராட்டை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: சர்வதேச வேட்டி தினம்: புதிய வேட்டி சட்டை அறிமுகம்

Intro:உலக வேஷ்டி தினத்தை முன்னிட்டு வேஷ்டியுடன் வலம்வந்த காரைக்கால் மாவட்ட ஆட்சியர்.
Body:உலக வேஷ்டி தினத்தை முன்னிட்டு வேஷ்டியுடன் வலம்வந்த காரைக்கால் மாவட்ட ஆட்சியர்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி தினம் ஜனவரி 6-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. வேட்டி தினத்தை சிறப்பிக்கும் விதமாக இளைஞர்கள் மற்றும் பல தமிழ் பல ஆர்வலர்கள் இன்று வேஷ்டி அணிந்து தமிழ் பாரம்பரியத்தை பறை சாற்று வார்கள்.

இந்நிலையில் எப்போதும் வெஸ்டன் கலாச்சாரமான பேண்ட் அணிந்திருக்கும், புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா உலக வேஷ்டி தினத்தை முன்னிட்டு இன்று தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையுடன் தனது அலுவல் பணிகளையும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண் டார். இது இது தமிழர் கலாச்சாரத்தின் மீது பற்றுள்ள பலரது பாராட்டையும் பெற்றது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.