ETV Bharat / bharat

இந்தியாவில் 23 லட்சத்தை தாண்டிய கரோனா

author img

By

Published : Aug 12, 2020, 5:33 PM IST

டெல்லி: நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 60 ஆயிரத்து 963 பேருக்கு கரோனா பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியுள்ளது.

கோவிட்
கோவிட்

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 60 ஆயிரத்து 963 கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அத்துடன் 834 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 23 லட்சத்து 29 ஆயிரத்து 638 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 6 லட்சத்து 43 ஆயிரத்து 948 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 16 லட்சத்து 39 ஆயிரத்து 599 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், நாட்டில் இதுவரை 46 ஆயிரத்து 61 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இன்று (ஆகஸ்ட் 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 7 லட்சத்து 33 ஆயிரத்து 439 பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் இரண்டு கோடியே 60 லட்சத்து பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி கொள்முதலை நிர்வகிக்க நிபுணர் குழு அமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.