ETV Bharat / bharat

கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் 92.66 லட்சம் பேருக்கு பாதிப்பு

author img

By

Published : Nov 26, 2020, 2:52 PM IST

கடந்த 24 மணிநேரத்தில் 44 ஆயிரத்து 489 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 524 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

COVID-19 tracker
COVID-19 tracker

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லி, மேற்குவங்கம், ஹரியானா, கேரளா மாநிலங்களில் பாதிப்பு தீவிரமடைந்துவருகிறது.

இந்நிலையில், நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 44 ஆயிரத்து 489 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 524 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்:

இந்தியாவில் இதுவரை மொத்தம் 92 லட்சத்து 66 ஆயிரத்து 705 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது நான்கு லட்சத்து 52 ஆயிரத்து 344 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 86 லட்சத்து 79 ஆயிரத்து 138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 223 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 46 ஆயிரத்து 748 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக கர்நாடகாவில் 11 ஆயிரத்து 714 பேர், தமிழ்நாட்டில் 11 ஆயிரத்து 655 பேர், டெல்லியில் எட்டாயிரத்து 621 பேர், மேற்குவங்கத்தில் எட்டாயிரத்து 720 பேர் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை நிலவரம்:

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (நவ. 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 90 ஆயிரத்து 238 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை மொத்தமாக சுமார் 13 கோடியே 59 லட்சத்து 31 ஆயிரத்து 545 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: லஞ்சம் கேட்ட போலீஸார்- கட்டுக்கட்டாக சிக்கிய பணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.