ETV Bharat / bharat

வெள்ள நீர் பாதிப்பு; தடுப்புச்சுவர் திட்டம் தடுத்து நிறுத்தம்-மல்லாடி கிருஷ்ணாராவ்!

author img

By

Published : Aug 9, 2019, 8:26 PM IST

புதுச்சேரி: மழை வெள்ள தடுப்பு திட்டத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடுத்ததாக அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

FLOOD SITUATION

இதுகுறித்து யானம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், புதுச்சேரி மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வெள்ள தடுப்புச்சுவர் திட்டம் தடுத்து நிறுத்தம் பற்றி பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

’கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் யானம் பகுதி முழுவதுமாக தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் ஏற்படும்போது பாதிப்பிலிருந்து தடுப்பதற்காக மத்திய அரசு 136 கோடி ரூபாய் மதிப்பில் மழை வெள்ள தடுப்பு திட்டம் செயல்படுத்த இருந்தது.

ஆனால் இத்திட்டத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடுத்து நிறுத்தினர். இதனால் இப்பகுதி தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

ஏற்கனவே கிரண்பேடி மீது முதலமைச்சர் நாராயணசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ள நிலையில் தற்போது சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வெள்ளத்தடுப்பு திட்டத்தை துணைநிலை ஆளுநர் தடுத்ததாக வைத்திருக்கும் குற்றச்சாட்டு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் புதுச்சேரி பிராந்தியமான ஏனம் பகுதி மழை வெள்ளத்தால் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் ஆற்றின் வெள்ளத்தடுப்பு திட்டத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிறுத்தி உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் புகார் கூறியுள்ளார்


Body:புதுச்சேரியின் பிராந்தியமான ஏனம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்று பகுதியில் உள்ளது இங்கு கடந்த சில நாட்களாக கனமழையால் நகரின் பல பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டு மழைநீர் காணப்படுகிறது இந்த நிலையில் இதுகுறித்து குறித்து தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சுகாதாரத்துறை மற்றும் சுற்றுலா துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் etv bharat திற்காக பிரத்தியேக பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர் கோதாவரி ஆற்றில் ஏற்படும் கடும் வெள்ளத்தால் ஏனாம் பகுதி ஏனம் நிரந்தரமாக மழை வெள்ளத்தால் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது பாதிப்பிலிருந்து தடுப்பதற்காக மத்திய அரசின் 136 கோடி ரூபாய் நிதி திட்டத்தில் மழை வெள்ள தடுப்பு திட்டம் செயல்படுத்த இருந்தது இதனை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இத்திட்டத்தை தடுத்துள்ளார் இதனால் இப்பகுதி தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார் துணைநிலை ஆளுநர் மீது முதலமைச்சர் நாராயணசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ள நிலையில் தற்போது சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வெள்ளத்திற்கு வெள்ளத்தடுப்பு திட்டத்தை துணைநிலை ஆளுநர் தடுத்ததாகவும் தற்போது மழை வெள்ளம் ஏற்பட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தான் காரணம் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Conclusion:கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் புதுச்சேரி பிராந்தியமான ஏனம் பகுதி மழை வெள்ளத்தால் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் ஆற்றின் வெள்ளத்தடுப்பு திட்டத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிறுத்தி உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் புகார் கூறியுள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.