ETV Bharat / bharat

புதுச்சேரியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பிச்சையெடுத்து போராட்டம்

author img

By

Published : Oct 19, 2020, 4:12 PM IST

புதுச்சேரி: மாணவர் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பிச்சையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்கள் பிச்சையெடுத்து போராட்டம்
ஆசிரியர்கள் பிச்சையெடுத்து போராட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோட், சூட் அணிந்து பிச்சை எடுத்து வித்தியாசமான முறையில், மாணவர் கூட்டமைப்பு சார்பில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு, இன்று வேலை கேட்டு நூதன போராட்டம் நடத்தினர். இதில், மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள்:

  • 7 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணி நியமனத்தை புதுச்சேரி அரசும், கல்வித்துறையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.
  • 7 ஆண்டில் முடிவடையும் ஆசிரியர் தேர்வு சான்றிதழுக்கு ஓராண்டு கால நீட்டிப்பு வழங்க வேண்டும்.
  • வயதில் இரண்டு ஆண்டுகள் தளர்வு அளிக்க வேண்டும்

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.