ETV Bharat / bharat

இந்தியாவில் 25 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு!

author img

By

Published : Aug 15, 2020, 9:31 PM IST

டெல்லி: இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 8.68 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

COVID
COVID

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 65 ஆயிரத்து 2 பேருக்கு கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அத்துடன் 996 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 25 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதுவரை மொத்தம் 25 லட்சத்து 26 ஆயிரத்து 192 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 6 லட்சத்து 68 ஆயிரத்து 220 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில், இதுவரை 49 ஆயிரத்து 36 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

கரோனா பரிசோதனை விவரம் குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இன்று (ஆகஸ்ட் 15) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8 லட்சத்து 68 ஆயிரத்து 679 பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் இரண்டு கோடியே 85 லட்சத்து 95 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வரி செலுத்துவோருக்கு மத்திய அரசின் ‘வெளிப்படையான வரி விதிப்பு திட்டம்’ என்னென்ன பயன்களைத் தரும்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.