ETV Bharat / bharat

கோவிட்-19: 3 மாதங்தகளில் இல்லாத குறைவான பாதிப்பை கண்ட இந்தியா

author img

By

Published : Oct 27, 2020, 12:42 PM IST

கடந்த மூன்று மாத காலத்தில் மிகக் குறைந்த அளவிலான கரோனா பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

COVID-19 LIVE
COVID-19 LIVE

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 36 ஆயிரத்து 470 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 488 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்

இதுவரை மொத்தம் 79 லட்சத்து 46 ஆயிரத்து 429 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆறு லட்சத்து 25 ஆயிரத்து 857 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 72 லட்சத்து 01 ஆயிரத்து 070 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 502 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (அக்.27) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது லட்சத்து 58 ஆயிரத்து 116 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 10 கோடியே 44 லட்சத்து 20 ஆயிரத்து 894 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நெடுஞ்சாலை ஆணையத்தில் திட்டங்கள் தாமதம்: அதிருப்தியில் நிதின் கட்கரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.