ETV Bharat / bharat

கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 50 ஆயிரத்தை நெருங்கும் இந்தியா

author img

By

Published : Jul 24, 2020, 12:03 PM IST

டெல்லி: நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 49 ஆயிரத்து 310 பேருக்கு நோய் பாதிப்பு பதிவாகியுள்ளது.

Covid 19
Covid 19

நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 49 ஆயிரத்து 310 கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அத்துடன் 24 மணிநேரத்தில் 740 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

இதையடுத்து, நாட்டில் ஒரே நாளில் கரோனா பாதிப்பு பதிவாகும் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3.47 லட்சம் நோய் பாதிப்பு பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக 1.92 லட்சம் பாதிப்புடன் தமிழ்நாடு இரண்டாமிடத்தில் உள்ளது.

இதுவரை, மொத்தம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 945 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 4 லட்சத்து 40 ஆயிரத்து 135 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 8 லட்சத்து 17 ஆயிரத்து 209 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், நாட்டில் இதுவரை 30 ஆயிரத்து 601 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இன்று (ஜூலை 24) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 801 பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் ஒரு கோடியே 54 லட்சத்து 28 ஆயிரத்து 801 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிகார் வெள்ளம்: 7.65 லட்சம் பேர் பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.