ETV Bharat / bharat

இந்தியாவில் ஒரே நாளில் 97 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிப்பு!

author img

By

Published : Sep 17, 2020, 12:41 PM IST

டெல்லி: உலகிலேயே முதல்முறையாக ஒரு நாளில் அதிகப்படியான கரோனா பாதிப்பு இந்தியாவில் பதிவாகியுள்ளது

கரோனா
கரோனா

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 90 ஆயிரத்தை தாண்டுகிறது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கடந்த 24 மணி நேரத்தில் 97 ஆயிரத்து 894 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல், கரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 1,132 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51 லட்சத்து 18 ஆயிரத்து 253ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 198 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 40 லட்சத்து 25 ஆயிரத்து 79 ஆக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்

அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 21 ஆயிரத்தை கடந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆந்திர மாநிலத்தில் கரோனா பாதிப்பு 5 லட்சத்து 92 ஆயிரமாக உள்ளது. இதுவரை மொத்தமாக 6 கோடியே 5 லட்சம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மட்டும் சுமார் 11 லட்சத்து 36 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.