ETV Bharat / bharat

கரோனா பாதிப்பு: இந்தியாவில் ஒரே நாளில் 49,931 பேருக்கு கரோனா உறுதி!

author img

By

Published : Jul 27, 2020, 7:15 PM IST

டெல்லி: இன்று (ஜூலை 27) ஒரே நாளில் 49 ஆயிரத்து 931 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பாதிப்பு: இந்தியாவில் இன்று ஒரே நாளில் 49,931 பேருக்கு கரோனா உறுதி!
Corona cases in india

இந்தியாவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று (ஜூலை 27) ஒரே நாளில் 49 ஆயிரத்து 931 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், இன்றைய (ஜூலை27) நிலவரப்படி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 35 ஆயிரத்து 453 ஆக உயர்ந்துள்ளது.

இதில், 9 லட்சத்து 17 ஆயிரத்து 568 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, 32 ஆயிரத்து 771 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

தற்போது, 4 லட்சத்து 85 ஆயிரத்து 114 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருக்கின்றனர் என மத்திய அரசின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.