ETV Bharat / bharat

இந்தியாவில் 22 ஆயிரம் பேருக்கு புதிதாக கரோனா தொற்று!

author img

By

Published : Dec 26, 2020, 2:53 PM IST

டெல்லி: இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22 ஆயிரத்து 273  பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

COVID-19
COVID-19

இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி நாட்டில் தற்போது கரோனா சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த தகவல் பின்வருமாறு:

கரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22 ஆயிரத்து 273 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 1 லட்சத்து 69 ஆயிரத்து 118 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பால் (டிச.25) நேற்று ஒரேநாளில் 251 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 343 ஆக அதிகரித்துள்ளது. இதனால் உயிரிழப்பு 1.45 விழுக்காடாக குறைந்துள்ளது.

இதுவரை கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 97 லட்சத்து 40 ஆயிரத்து 108 ஆக அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்தோரின் விகிதம் 95.78 விழுக்காடாக அதிகரித்துள்ளது. மேலும் கரோனா தொற்றுக்கு 2 லட்சத்து 81 ஆயிரத்து 667 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதுவரை மொத்தமாக 16 கோடியே 71 லட்சம் 59 ஆயிரத்து 289 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று(டிசம்பர் 24) மட்டும் 8 லட்சத்து 53 ஆயிரத்து 527 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

சென்ற ஆகஸ்ட் 7-ஆம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23 ஆம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது.

செப்டம்பர் 16 ஆம் தேதி 50 லட்சத்தையும், 28 ஆம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11 ஆம் தேதி 70 லட்சத்தையும் எட்டியது. 29 ஆம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20 ஆம் தேதி 90 லட்சத்தையும் , டிசம்பர் 19 ஆம் தேதி ஒரு கோடியையும் கடந்தது நினைவுகூரத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.