இந்திய வானிலை ஆய்வு மையம் கடலோர கர்நாடகா, ஆந்திரா, யானம் ஆகிய இடங்களில் இன்று அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஒடிசா, கொங்கன், கோவா, தெலங்கானா, ராயலசீமா, கர்நாடகா, கேரளா, மஹே ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.
மேலும், இந்த இடங்களைத் தவிர சத்தீஸ்கர், மத்திய மகாராஷ்டிரா, மராத்வாடா, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய நாடுகளிலும் நாள் முழுவதும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் முதல் 23 டிகிரி செல்சியஸ் வரை உள்ளதாகவும், ஜம்மு-காஷ்மீர், விதர்பா, சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காள மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு மத்திய அரேபிய கடலில் பலத்த காற்று வீசுவதாலும் மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளாவின் கடற்கரைப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், வடக்கு தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகியவற்றின் கடற்கரைகளில் மோசமான வானிலை நிலவுவதாலும்; அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதேபோல், அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலத்தின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது . இந்த ரெட் அலர்ட் அக்டோபர் 25ஆம் தேதி காலை 8.30 மணி வரை நீடிக்கும் என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: