ETV Bharat / bharat

வங்கி மோசடி: 19 இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ!

author img

By

Published : Dec 26, 2020, 4:48 PM IST

வங்கி மோசடியில் ஈடுபட்ட டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் அதற்கு சொந்தமான 19 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.

CBI searches 19 locations in 2 separate bank fraud cases
CBI searches 19 locations in 2 separate bank fraud cases

டெல்லி: எஸ்.பி.ஐ, பஞ்சாப், சிந்து வங்கி ஆகிய வங்கிகளில் மோசடி செய்ததாகக்கூறி மத்திய புலனாய்வு பிரிவினர் இரண்டு வெவ்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி மற்றும் மும்பையில் 19 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனனர்.

இதுதொடர்பாத சிபிஐ அலுவலர் அளித்த தகவலில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 67.07 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கிருஷ்ணா நிட்வேர் டெக்னாலஜி லிமிடெட், நிறுவனத்தின் இயக்குநர்கள், சிவ அரசு ஊழியர்கள் மீது வங்கியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்குத் தொடர்பாக மும்பை மற்றும் கிருஷ்ணா நிட்வேர் டெக்னாலஜி லிமிடெட் இயக்குநர்களின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியதாகக் கூறினார்.

மேலும், 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் எஸ்.பி.ஐ-வங்கிக் கணக்கை மோசடி செய்வதற்கும், பணத்தை மாற்றுவதற்கும், பயனாளர்களை ஏமாற்றும் நோக்கிலும் பயன்படுத்தி வந்தனர் என வங்கி சார்பில் புகாரளிக்கப்பட்டதாகக் கூறினார்.

அதன் கடன் ரசீதுகளில் சுமார் 20 விழுக்காடு மட்டுமே வங்கி வழியாகவும் மீதமுள்ள தொகை தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் வங்கி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையில், ஏஜென்சியில் மோசடி செய்தவர்கள் எனக் கூறி பல குற்ற ஆவணங்களை சிபிஐ மீட்டதாகத் தெரிகிறது.

டெல்லி மற்றும் நொய்டாவை தளமாகக் கொண்ட ஆல்பைன் ரியல்டெக் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் இயக்குநர்கள், இரண்டு தனியார் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் சிலர் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் மோசடி செய்ததாக்கூறி இரண்டாம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புகாரில் அந்நிறுனம் 64.78 கோடி ரூபாய் வங்கி நிதிகளை முறைகேடு செய்தல், பண மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளின் ஒன்பது இடங்களில் கடன் வாங்கிய நிறுவனம், குற்றம் சாட்டப்பட்டவர்களின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: சிபிஐ அலுவலகத்தில் கருப்பு ஆடுகள் - சென்னை உயர் நீதிமன்றம் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.