ETV Bharat / bharat

அனைத்து மக்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்த முதலமைச்சர் முடிவு!

author img

By

Published : Jun 23, 2020, 3:30 PM IST

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அடுத்த 90 நாள்களுக்குள் கரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

andhra cm
andhra cm

ஆந்திர மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை எட்டியுள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அம்மாநிலத்தில் நேற்று (22/05/20) ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ’கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் அடுத்த 90 நாள்களுக்குள் கரோனா பரிசோதனை செய்யக்கோரி சுகாதாரத் துறையிடம் உத்தரவிட்டார். நகரங்களில் 104 ஆம்புலன்ஸை பயன்படுத்தியும் கிராமங்களில் மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதனை நிகழ்த்த வேண்டும்’ என்றார்.

இதனையடுத்து, மாநிலத்தில் ஒரு நாளைக்கு 24 ஆயிரத்துக்கும் மேலாக பரிசோதனைகள் நடத்துவதாகவும் அதில் 40 -60 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி அதிகமாக நடத்தப்படுவதாகவும் கூட்டத்தில் கலந்துகொண்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா பரவலுக்கு சீனா தான் காரணம் என்பதை ட்ரம்ப் உறுதியாக நம்புகிறார் : வெள்ளை மாளிகை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.